யாழ்.மாவட்ட செயலக உத்தியாகத்தர்களின் உடல், உள ஆரோக்கிய மேம்பாடு தொடர்பான கருத்துரை வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (10.08.2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்து கொண்டு மக்களிடையே காணப்படும் பழக்கவழக்கம், உணவுப்பழக்கவழக்கம், ஆன்மீகம் ,இயற்கையோடு வாழ்தல் தொடர்பாக கருத்துரை வழங்கினாா்.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடையே ஆரோக்கியமான வேலைச்சூழலை ஏற்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் மேலதிக சுகாதார வைத்திய அதிகாாி Dr.K.சிவசுதன் அவர்கள் அலுவலகத்தையும் குடும்பத்தையும் ஆரோக்கியமாக கொண்டு செல்லல் தொடர்பாக நாம் வேலை, குடும்பம் இரண்டையும் எவ்வாறு சமநிலையில் கொண்டு செல்லலாம், அதற்காக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் நிதி முகாமை , நேர முகாமை , குழுச்செயற்பாடு தொடர்பாக கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
Healthy work place 01  Healthy work place 02  Healthy work place 03  Healthy work place 04  Healthy work place 05