வடமராட்சி நீரேரியின் செயல்பாட்டுக் கையேட்டை மேம்படுத்தல் தொடர்பான மாவட்ட மட்ட உறுதிப்படுத்தல் பயிற்சிப்பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (17.10.2023) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
வடமராட்சி நீரேரியின் செயல்பாட்டுக் கையேட்டை மேம்படுத்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறிப்பாக கிராம மட்ட ,பிரதேச மட்ட பங்குதாரர்களின் கருத்துக்கள், தொண்டைமானாறு தடுப்பணைக் கதவுகளின் தற்போதைய இயக்க பொறிமுறை மற்றும் தற்கால சூழலுக்கேற்ப மாற்றி அமைத்தல், பங்குதாரர்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புகளை கையளித்தல், ஒன்றிணைந்த நீரேரி முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை கண்டறிதல் , பிரதேச செயலக ரீதியாக கண்டறியப்பட்ட பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
 
வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகு, வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் N.சுதாகரன், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் (கிளிநொச்சி) K.கருணாநிநி, வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் S.சர்வராஜா, வடமாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் A.அமிர்தசீலன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் , பிரதி விவசாய பணிப்பாளர், துறை சாா் நிபுணத்துவ பேராசிரியர்கள் ,மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலாளர்கள்(கோப்பாய், கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி, மருதங்கேணி) , துறை சாா் திணைக்கள அதிகாரிகள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
thondaimanaru 01 thondaimanaru 02 thondaimanaru 03 thondaimanaru 04