பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்கள் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, வடக்கு மாகாண அமைச்சுக்கு பதவியுயர்வு பெற்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இவர் 1999 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தத்தராக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அரச நியமனத்தை பெற்று, 2002 ஆம் ஆண்டு உதவித்திட்டமிடல் பணிப்பாளராக பணிபுரிந்து, 2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக நியமனம் பெற்றாா். நானாட்டான் மற்றும் வவுனியா பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து பின் நெடுந்தீவு மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராக சிறப்பாக சேவை செய்து 2017 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

sri 02 sri 01