வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான (வெளிநாட்டு வேலைவாய்ப்பு)பயிற்சி நெறி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் 27.10.2023 மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.15 வரை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சி நெறியில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான குடும்ப அபிவிருத்தி்த் திட்டம் , நிதி முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் பயிற்சியளிக்கப்பட்டன.





