பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) விழிப்புணர்வு சுவரொட்டி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு 24.11.2023 மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் எனும் தொனிப்பொருளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையான 16 நாட்கள் இச் செயற்பாட்டு வாரம் மேற்கொள்ளப்படுகின்றன.






