வடக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று (01.12.2023) காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்காக பத்தாயிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான பயனாளிகள் தெரிவு மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வீட்டுத்திட்ட நிபந்தனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் சௌபாக்கிய அடுத்த ஆண்டுக்கான வேலைத்திட்டம் தயாரித்தல், மணல்அகழ்வு, வீட்டுத்தோட்டம், காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கைகள், கிராம சேவையாளர் அலுவலகத்துக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுநரின் செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் , பிரதேச செயலாளர்கள் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள், கௌரவ அமைச்சரின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.





