சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதனை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 09.02.2024 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்துவோர் மீது சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக தீவுப் பகுதிகளில் கால்நடைகளை களவெடுத்தல் மற்றும் சட்டவிரோதமாக கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுதல் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு பொலிஸார் விரைவாக சட்டநடவடிக்கைகளையெடுத்தல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.





