யாழ்ப்பாண மாவட்டத்தில் உலக  உணவுத் திட்டத்தின்  அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைப்பு செய்வதற்கான  ஆரம்பகட்ட கலந்துரையாடல் மாவட்ட பதில்  அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 18.03.2024 யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில்  திட்டப் பொறியியலாளர்(WFP) திரு.சந்திரதிலக வீரசிங்க, திரு.எம்.நியூமத் (WFP), ஜனாதிபதி செயலக உலக உணவுத் திட்ட பிரிவுப் பணிப்பாளர் திரு.ஆர்.நிசாந்தன், மாவட்ட செயலக பதில் திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுரேந்திரநாதன், மாவட்ட செயலக பொறியியலாளர் திரு.க.திருக்குமார், கமநல  அபிவிருத்தி திணைக்கள உதவி பணிப்பாளர் பி.தெய்வநாயகி, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்(WFP) திரு.V.கஜானன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.