யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (14.04.2024) காலை 9.15 மணி முதல் காலை 11.30 மணிவரை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினையும் வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.





