தெங்கு செய்கை மற்றும் பாக்கு செய்கை தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்  (15.05.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ் மாவட்ட தெங்கு செய்கை மற்றும் பாக்கு செய்கை தொடர்பான தற்போதைய நிலை மற்றும் இவ் வருட திட்டமுன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் Gerald Rebelli, உலக உணவுத்திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி திரு.முஸ்தபா நிஹ்மத் மற்றும் மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், தென்னை அபிவிருத்தி சபை பிராந்திய முகாமையாளர், கமக்கார அமைப்பின் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
coconut 01 coconut 02  coconut 03  coconut 04  coconut 05  coconut 06  coconut 07