உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ( Deputy Country Director) Mr.Gerald Rebelli அவர்கள் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் (13.05.2024) சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் "Food for Assets " செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் இச்செயற்றிட்டம் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நாளை (14.05.2024) "Food for Assets " செயற்றிட்டத்தை நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்விலும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி குழுவில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி திரு.முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் திரு.W.A.சந்திரதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வ.தர்சினி ஆகியோர் கலந்துகொண்டனர்.