உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் வதிவிட பிரதிநிதி திரு.அப்துள் ரகீம் சித்திக் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (04.07.2024) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து உலக உணவுத் திட்டத்தின் "Food for Assets" செயற்றிட்டத்தின் விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில்(நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய்) " Food for Assets" செயற்றிட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை செயற்படுத்தல் குறிப்பாக குளங்கள் கால்வாய்களை புனரமைத்தல் தொடர்பாகவும் செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேற்படி கலந்துரையாடலில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி திரு.முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் திரு.று.யு.சந்திரதிலக்க வீரசிங்க , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

1 2 3 4 5 6