வினைத்திறனான அரச சேவையினை வழங்குவதற்கான கருத்தூட்டல் செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.07.2024 ) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் Transparency of International Sri Lanka நிறுவனத்தின் அனுசரணையுடன் மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக நிறைவேற்று, பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நடைபெற்றது.
இச் செயலமர்விற்கு நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக ( Zoom) அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. தம்மிக்க முத்துக்கல அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் Ms. டிலாந்தி சிறிவர்த்தன, TISL அலுவர் Ms. சகுந்தலைஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இச் செயலமர்வில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாக கிராம அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.
 
1 2 3 64 5  7 9 10 11 12