உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்தில் இன்று (16.08.2024) தொடக்கம் பக்த்தர்களுக்கு பிரதி வெள்ளிக்கிழமைதோறும் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண பதில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. சிறிமோகனன், துர்க்கை அம்மன் தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், நகுலேஸ்வர ஆதீனகர்த்தா, தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கடற்படை அதிகாரிகள், பக்தர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






