சுங்க திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் இன்றைய தினம் (02.09.2024) நன்பகல் 1.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் எதிர்கால பிராந்திய அபிவிருத்தி மற்றும் சுங்க திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளைப் பேணுதல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் Ms. சிறிநிதி கருணாரட்ன, சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு. சுதந்த சில்வா, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் சுங்கத் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5