சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது புதிய விமான சேவை இண்டிகா (Indiga) விமான சேவை நேற்றைய தினம் (01.09 2024 ) தனது சேவையினை ஆரம்பித்தது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இச்சேவை மூலம் கலந்து கொண்டு முதலில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நினைவுப் பொதிகள் வழங்கி வரவேற்றாா்.
இந்நிகழ்வில் யாழ் .இந்திய துணைத்தூதுவர், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர் மாவட்ட விமானப் படை அதிகாரிகள், தொழிற்துறைத் திணைக்கள அதிகாரிகள், வடமகாண கலாசாரத் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஹோட்டல் முகாமையாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோா் பங்கு பற்றியிருந்தனர்






