யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது அதிமேதகு சனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (31.01.2025) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அதிமேதகு சனாதிபதி உள்ளிட்டவர்களை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.
வரவேற்புரையினைத் தொடர்ந்து யாழ் மாவட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான முன்வைப்பு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.
அதிமேதகு சனாதிபதி அவர்களினால் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டு, மிக முக்கியமான தீர்வுகளும் அறிவிப்புக்களும் வழங்கப்பட்டது.
இக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், கௌரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கௌரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண அமைச்சின் பிரதம செயலாளர் திரு. இ. இளங்கோவன் மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகள், கடற்படை மற்றும் விமானப்படை கட்டளை தளபதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 7 3
 4 6 5