"க்ளீன் ஸ்ரீலங்கா" கடற்கரையோரத்தினை சுத்தப்படுத்தல் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.02.2025) பி. ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், எதிர்வரும் 23.02.2025 ஆம் திகதி பிரதேச செயலக ரீதியாக கடற்கரையோரத்தினை சுத்தப்படுத்தல் செயற்றிட்டத்தினை வினைத்திறனாக செயற்படுத்த வேண்டும் எனவும், அதற்கான ஒழுங்கமைப்பினை சிறப்பாக மேற்கொள்ளுமாறும் அனைவரையும் கேட்டுக் கொண்டார். பிரதேச செயலாளர்களால் தமது பிரதேச செயலகத்தினால் சுத்தப்படுத்தவுள்ள கடற்கரைகளின் விபரங்கள் அறியத்தரப்பட்டது.
இக் கலந்துரையாடலினைத் தொடர்ந்து பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3