கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.02.2025) பி.ப 1.45 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டத்தினூடாக நிலையான மற்றும் உயர்வான வாழ்க்கைத்தரத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பொருளாதார சமூக மற்றும் உள ரீதியாக வலுவூட்டுதலை இலக்காகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தை யாழ்ப்பாண நடைமுறைப்படுத்த மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைள் தொடர்பாகவும் அவை தொடர்பாக மாவட்ட உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் மற்றும் பயனாளிகள் தெரிவு தொடர்பாகவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம்(திட்டமிடல்) திருமதி .ஏ. பாக்கியராஜா அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் ,பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தி திணைக்கள கணக்காளர்கள் மற்றும் முகாமையாளர்கள் ,மாவட்ட திணைக்களத்தலைவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






