உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதால் அது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் தெரிவத்தாட்சி அலுவலர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 14.03.2025 அன்று பி. ப 4.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஜே. ஏ. ஹாலிங்க ஜெயசிங்க, உதவித் தேர்தல் ஆணையாளர் திரு இ. சசீலன், பிரதம கணக்காளர் திரு எஸ். கிருபாகரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. ரமேஷ்குமார் மற்றும் கணக்காளர் திரு. ஏ. நிர்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4