பெண்களுக்கான மோட்டாா் சைக்கிள் பழுது பாா்க்கும் பயிற்சி நிகழ்வு
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மாவட்டச் செயலக பெண் உத்தியோகத்தர்களுக்கான மோட்டாா் சைக்கிள் பழுது பாா்க்கும் பயிற்சி நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.03.2025) காலை 10.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் வளர்ச்சியில் பாரிய பங்காற்றுவதில் மோட்டாா் சைக்கிள் முக்கியமானதாக மாறிவிட்டது எனவும், ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள் பயன்படுத்துவோரில் பெண்களே அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தாா். மேலும், இது தொடர்பிலாக ஓரளவு தெளிவு இருந்தாலும் இந்த மோட்டாா் சைக்கிள் பழுது பாா்த்தல் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பாக மேலதிக தெளிவுகளை முழுமையாக பெற்றுக்கொள்ள இவ்வாறான சந்தர்ப்பங்களை வினைத்திறனாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பெண்களுக்கான மோட்டாா் சைக்கிள் உதிரிப்பாகங்கள், தினசரி பாதுகாப்பு முறை, பரிசோதனை முறை, காலத்திற்கேற்ப பராமரிப்பு, மாற்றங்களால் ஏற்படும் பாதிப்பு எரிபொருள் மீதப்படுத்தல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் உதவி மாவட்ட செயலாளர் , டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் ஆலோசகர் மற்றும் குழுமத்தினர், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் மாவட்ட செயலக பெண் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 7 8 9