சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுடனான நுண்நிதி சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.04.2025) நண்பகல் 12.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் 33 சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் மேலும் வினைத்திறனாக இருத்தல் வேண்டும் எனக்குறிப்பிட்டு பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
1.செயற்படாத சிறுகுழுக்கள் மீது பணத்தினை வைப்பிலிட்டு மீள இயக்க நடவடிக்கை எடுத்தல் அல்லது மீளவே இயக்க முடியாது எனில் அதனை முடிவுறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட வங்கி முகாமையாளர்கள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செயற்பாட்டில் உள்ள குழுக்கள் அனைத்திற்கும் ஒரு நபரிற்கு நாளாந்தம் 20/= வீதம் கிரமமாக சேமிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
2.மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சகல வங்கிகளையும் தரப்படுத்தல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
3.மாதாந்தம் சகல முகாமையாளர்களுக்கும் மாவட்ட மட்டத்தில் அறிவை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தினையும் முன்னேற்ற மீளாய்வினையும் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் வழங்கினார்.
4.புதிய சிறு குழுக்களை உருவாக்கவும் சேமிப்பினை அதிகரிக்கவும் நடிவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
5.வேலணை, சாவகச்சேரி, வரணி, ஆவரங்கால், ஊர்காவற்றுறை மற்றும் மருதங்கேணி வங்கிகளின் செயற்பாடுகளை மேலும் விருத்தி செய்வதற்கு அப் பிரிவுகளுக்குரிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி கூட்டத்தினை நடாத்த ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
6.இன்றைய கூட்டத்தின் முன்னேற்றத்தினை எதிர்வரும் யூன் மாத இறுதியில் மீண்டும் கலந்துராயாடி ஆராய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.
இக் கூட்டத்தில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. F. C. சத்தியசோதி, மாவட்ட ச் செயலக விடய சமுர்த்தி முகாமையாளர்கள், மாவட்ட கண்காணிப்பு சமுர்த்தி முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6