இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் 2024 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் பண சேகரிப்பு அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பருத்தித்தறை, நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்கள் பெற்றிருந்ததுடன், அங்கத்தவர்கள் இணைப்பு அடிப்படையில் தேசிய விருதிற்கு நல்லூர், பருத்தித்துறை, கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
மேலும் இம் முறை ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலை சிறப்பாக மேற்கொண்ட உத்தியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள்
மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (24.04.2025) பி.ப 5.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து பிரதேச செயலாளர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர் திரு. த.சங்கர் கலந்து கொண்டார்.






