தேசிய மட்டத்தில் சிறந்த விவாதப்போட்டி பாடசாலையை தெரிவு செய்வதற்கான மாகாண மட்ட விவாதப்போட்டி கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாகாணப் பணிப்பாளர் திரு. சி. சிவகெங்காதரன் தலைமையில் இன்றைய தினம் (16.05 2025) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் வழிகாட்டலில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் மாணவர்ளை இணைத்து " தொழில் முயற்சியாண்மை வட்டம்" என்ற குழுவை அமைத்து பாடசாலை மட்டத்தில் தொழில் முயற்சியாண்மை் விருத்தி செய்யும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு கட்டமாக தொழில் முயற்சியா ண்மை் தொடர்பான விவாதப் போட்டி பாடசாலைகளுக்கிடையில்
நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் மாவட்ட ரீதியான போட்டிகள் இடம்பெற்று அதில் சிறந்த பாடசாலைகள் இம்மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன.
இம்மாகாண மட்ட போட்டிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து 5 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 2 பாடசாலைகளும், மன்னாா் மாவட்டத்திலிருந்து 3 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்திலிருந்து 2 பாடசாலைகளும் ஆக 12 பாடசாலைகள் தெிவு செய்யப்பட்டன.
இதில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், வடமாகாண கல்வி வலய உதவிப்பணிப்பாளர், வங்கி உத்தியோகத்தர், சிறந்த தொழில் முயற்சியாளர் , தொழில் முயற்சியாளர்களுக்கு சேவை வழங்கும் உத்தியோகத்தர், ஆசிரியர்கள்,மாணவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5