1மாவட்ட பண்பாட்டு பெரு விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (30.09.2025) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட பண்பாட்டுப் பெரு விழா தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக பதிவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு. எஸ். ரமேஷ்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, நிர்வாக உத்தியோகத்தர் திரு ஆ. சத்தியமூர்த்தி, புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளர் திரு எம். வித்தியானந்தநேசன், மாவட்ட பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 46 7 8 9 10