வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க. சிவகரன் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.மு.நந்தகோபன் இணைத்தலைமையில் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டு ஊராட்சி முற்றக்கூட்டம் இன்றைய தினம்(22.10.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட மாவட்ட அளவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளாக அடையாளம் காணப்பட்ட சிறுவர், பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு, கல்வி, விவசாயம், பெண்களின் சிறு கைத்தொழில் உற்பத்தி, கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் ,போக்குவரத்து ஆகிய விடயங்களில் 3 விடயங்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டதற்கு குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவி திருமதி.ம.தமிழ்ச்செல்வி அவர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் மக்கள் எதிர்நோக்கும் பல்துறைசாா் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஊராட்சி முற்றத்தில் கலந்துரையாடி தீர்வு வழங்குவதை நோக்காக கொண்டு இக்கூட்டம் நாடாத்தப்பட்டது.இதில் ஊராட்சி முற்ற கூட்டத்தின் நோக்கம், அதன் செயற்பாட்டு அடைவுகள், செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் மாவட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் இணையத்தின் ஊடாக நிதி விடுவிப்பு தொடர்பான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளல், ஊராட்சி முற்ற அஞ்சல் பெட்டி வைக்க வேண்டிய இடங்கள் மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறையில் மலசலகூடப்பிரச்சினை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன
இக்கலந்துரையாடலில் மகளிர் விவகார அமைச்சின் கிறிசலிஸ் (Chrysalis )பிராந்திய மற்றும் திட்ட முகாமையாளர் ம.பிரபாகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்சினி, சாவகச்சேரி பிரதேச செயலாளர் ,குடிசாா் அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் ,செயலாளர் மற்றும் பிரதிநிதிகள்,ஊராட்சி முற்ற அங்கத்தவர்கள் மற்றும் பங்குதாரர்கள் கிறிசலிஸ் (Chrysalis ) நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசாா் மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6