போதைப் பொருள் அச்சுறுத்தலை தோற்கடிக்கும் "முழு நாடுமே ஒன்றாக " தேசிய அங்குரார்பண நிகழ்வு - நிகழ்நிலை மூலமாக சமநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தலை தோற்கடிக்கும் "முழு நாடுமே ஒன்றாக " தேசிய அங்குரார்பண நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.10.2025 ) காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனையின் அச்சுறுத்தல் மற்றும் அதன் பரவலின் ஆழத்தையும் கருத்தில் கொண்டு "முழு நாடுமே ஒன்றாக" என்ற தொனிப்பொருளில் முழு நாட்டையும் ஒண்றிணைத்த வகையிலான இந்த தேசிய திட்டம் நிகழ்நிலை மூலமாக சமநேரத்தில் சகல மாவட்ட ங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நிகழ்நிலை மூலமான சமநேரத்தில் நடைபெற்றது. கௌரவ ஜனாதிபதி அவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற "அகன்று செல்" போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக இல்லாதொழிப்பதற்கு பங்களிக்கும் பொறுப்பொன்றாக அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப்பிரமாண உறுதி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 4 6 7 8 8 9 10 12