யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் சகிதம் இன்றைய தினம் (11.11.2025) வலிகாமம் மேற்கு – சங்கானை பிரதேச செயலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதுடன், சங்கானை பிரதேச செயலகத்தின் ஒவ்வொரு அலுவகப் பிரிவுகளுக்கும் சென்று ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் போது, அரசாங்க அதிபர் அவர்களால் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு அதனை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டதுடன், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக பிரதேச செயலாளரையும் உத்தியோகத்தர்களையும் அரசாங்க அதிபர் பாராட்டினார் என்பதுடன், ஏனைய அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக சங்கானை பிரதேச செயலாளர் திருமதி. கவிதா உதயகுமார் அவர்களுடனும் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்க அதிபருடனான கண்காணிப்பு விஜயத்தில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டச் செயலக பிரதம பொறியியலாளர், மாவட்டச் செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






