சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவரத்தில் ஏற்பட்ட இடர்பாட்டால் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு கடமைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (26.11.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், நெடுந்தீவுக்கு கடல் பிராயணம் மூலம் சென்று கடமைகள் ஆற்றும் உத்தியோகத்தர்களைப் பாராட்டுவதாகவும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சுழற்சி முறையில் ஒரு வருடம் மட்டும் கடமையாற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கு அமைவாக, அக் கடமைகளை ஏற்று சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் சேவைகளை குறிப்பிட்டதுடன், காலநிலை சீராகிய பின்னர் கடல் போக்குவரத்து ஒழுங்கு செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும்,நெடுந்தீவில் உள்ள மக்களுக்கு பல இடர்பாடுகளுக்கு மத்தியில் அங்கு சென்று உத்தியோகத்தர்கள் கடமையாற்றிவருவதனை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு, உத்தியோகத்தர்களுக்கு இடர்பாடுகள் இருந்தால், அதனை தீர்த்து வைப்பதன் மூலம் உத்தியோகத்தர்கள் வினைத்திறனாக சேவையாற்ற வழி ஏற்படுவதால் நெடுந்தீவு மக்கள் நல்ல சேவையினை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, உத்தியோகத்தர்களின் இடர்பாடுகளை அல்லது பிரச்சனைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் மற்றும் நெடுந்தீவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9