அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் கொழும்பு- பத்தரமுல்லயில் ஆரம்பிக்கப்பட்ட 1000 இளம்தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான 4ஐ (4 I project) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொண்ட இளம் தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் விழிப்புணர்வுச் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.12.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், ஒவ்வொரு தொழில் முயற்சிகளையும் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் உற்பத்தித் திறனுடன் இணைந்து மேற்கொள்ளும் போது அதன் இலாபத்தை அதிகரிக்கும் அதேவேளை தேசிய உற்பத்தியிலும் அதன் பங்கை அதிகரிக்க கூடியதாக இருக்கும் என்பதை நோக்காக கொண்டு இத் திட்டம் உருவாக்கபட்டுள்ளதாகவும், தெரிவித்தார். மேலும், மூன்று ஆண்டுகளுக்குள் (2025 - 2028 வரை) தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தேசிய 4 ஐ திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதற்கட்டமாக 26 நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன எனவும், இலங்கை ரீதியில் 1000 தொழில் முற்சியாளர்களை உற்பத்தி திறன் மற்றும் தொழில் வழங்குகின்ற அனைத்து அமைச்சுக்களும் இணைந்ததாக தொழில் முற்சியாளர்கள் தேசிய உற்பத்தியில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கபட்டுள்ளதாகவும் அந்த வகையிலே இந்த பயிற்சி வகுப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சிப் பட்டறையின் வளவாளர்களாக தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தின் 4 ஐ திட்ட வளவாளர் திரு. ஹர்ஷன அரங்கவெல்ல, 4 ஐ திட்ட நிபுணர் திரு. தர்ஷன குலதுங்க அகியோர் கலந்து கொண்டனர். இவ் விளக்கவுரை விழிப்புணர்வில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்கள், தேசிய உற்பத்தித் திறன் மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6