வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் சங்கமம் - 2026' நிகழ்வு, இன்று(15.01. 2026) வியாழக்கிழமை மானிப்பாய் மருதடி ஆலய முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆலயச் சூழலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல்களைப் பார்வையிட்டவாறு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் அவர் கலந்து கொண்டதோடு அதன் பின்னர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் தமிழ் மக்களின் தனித்துவமான கலை, கலாசாரங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், பொதுமக்கள் மற்றும் கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7