மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழுவின் அலுவலக பயன்பாட்டுக்குத் தேவையான கணினித் தொகுதி மற்றும் தளபாடங்கள் Fairmed foundation நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரயாராச்சி அவர்களால் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்களிடம் இன்றைய தினம் (20.01.2026) மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக Fairmed foundation நிறுவனம் அவற்றை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி, அரச சார்பற்ற நிறுவன மாவட்ட இனணப்பாளர் திரு ந. தயாபரன், மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி. உமாசங்கர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் , மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






