2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டத்தின் முதலாவது அரையாண்டுக்கான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலும், வடக்கு மாகாண பிரதம பிரதிச் செயலாளர் (பொறியியல்) திரு. சுதாகர் அவர்களின் இணைத் தலைமையிலும் இன்றைய தினம் (23.01.2026) பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்ட விலை நிர்ணயக் கூட்டமானது மிக முக்கியமானது எனவும், அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் தனியார் துறைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைகள் நிர்ணயம் தேவையாகவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதன் விலைக்கு பொருட்கள் சேவைகளை பெற முடியாத நிலைமையும் காணப்படுவதாகவும், அதற்கேற்ப பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சேவை வழங்குனர்கள் இணைந்து விலைகளை நிர்ணயம் செய்யுமாறும், அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கு இது அத்தியாவசியமாகவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைகள் ஆராயப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொடர்புடைய சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 6 6 7 8 9 10