காரைநகர், புதுவீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அம்பாள் முன்பள்ளியின் கட்டடத் திறப்பு விழா பிள்ளையார் சனசமூக நிலையம் தலைவர் திரு. நா.பாலகிருஷ்ணன் தலைமையில் இன்றைய தினம் (25.01.2026) காலை 09.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினரா வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் கெளரவ கிருஷ்ணன் கோவிந்தராஜன், காரைநகர் பிரதேச செயலாளர் திருமதி ரஞ்சனா நவரத்தினம், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திருஞானசம்பந்தன் ஞானச்சந்திரன், தீவக வலயக் கல்வி (முன்பள்ளிகள்) உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சிவசுப்பிரமணியம் பவானந்தன் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் திரு. எஸ்.கே.சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். பொது மக்களின் பங்களிப்பில் 14.20 மில்லியன் ரூபாவில் இவ் முன்பள்ளிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மாணவர்களின் வரவேற்பு நடனம், பிள்ளையார் நடனம், கும்மி நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இந் நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 9