யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக திரு. கி. பொ. தனபாலா இன்றைய தினம் (02.02.2026) காலை 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடமையேற்பதற்கு முன்னராக சம்பிரதாயபூர்வமாக நிர்வாக உத்தியோகத்தர் வரவேற்க்கப்பட்டார் என்பதுடன், அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் இடம் பெற்றது. இவ் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள். நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்ற திரு. கி. பொ. தனபாலா அவர்கள், முன்னர் நல்லூர் பிரதேச செயலக நிர்வாக் உத்தியோகத்தராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






