"முழு நாடும் ஒன்றாக" தேசிய செயற்பாடு - போதைப் பொருளுக்கு எதிராக "அகன்று செல்" எனும் தொனிப் பொருளினையும், முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் 1818 இனையும் உள்ளடக்கிய வகையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டும் நிகழ்வு உதவி பொலிஸ் அத்தியகட்சகர் திரு. நளிந்த திலிரூத் தலைமையில் இன்றைய தினம் (04.03.2026)மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்துடன்,விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினையும் பொதுமக்களுக்கு வழங்கிவைத்தார். இவ் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி திரு. சுரேக்க பிறேமரட்ண, யாழ்ப்பாண பொலீஸ் பொறுப்பதிகாரி திரு. கருணாரட்ன ஆகியோரும் பங்குபற்றி விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டினார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10