போதை ஒழிப்பு தடுப்பு செயற்திட்டம் தொடர்பான மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (5.3.2026) பி.ப 3.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது "முழு நாடுமே ஒன்றாக" விஷ போதைப் பொருட்களை தடுப்பதற்கான வாரமாக அதிமேதகு சனாதிபதி அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் மதுசார மற்றும் போதைப் பொருள் தடுப்பு நிலையத்தின் இணைப்பாளர் எஸ். மோகன்தாஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு போதை ஒழிப்பு செயற்றிட்டம் தொடர்பான விளக்கம் அளித்தனர இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், போதைப் பொருட்களின் செயற்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளை அனைவரும் அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும், அரசாங்கத்தினுடைய கொள்கையின் அடிப்படையில் பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், விஷ போதைப் பொருட்களுடைய ஆபத்து அனைவரையும் பாதிக்கும் நிலை ஏற்படலாம் என்பதால், அதனை முற்றாக நமது நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் எனவும், அதற்கு எல்லோரும் பங்கெடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும் எனவும், அதனை ஒழிக்க எல்லோரும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார். இவ் விழிப்புணர்வு நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்சினி மற்றும் பதவி நிலை உத்யோகத்தர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11