புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை அலுவலர்களுக்கான செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் தலைமையில் இன்றைய தினம் (09.03.2026) காலை 09.00 மணிக்கு முகாமைத்துவ திறன் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இவ் செயலமர்வில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவைகள் அலுவலகர்களுக்கான 10 நாள் பயிற்சி செயலமர்வு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி அனுசரணையில் மாவட்டச் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெறுகின்றது எனவும், இதனை சரியாக உத்தியோகத்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், சிறந்த வளவாளர்களால் இச் செயலமர்வு நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இச் செயலமர்வுக்குரிய வழிகாட்டுதல்கள் மேலதிக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. கி. பொ. தனபாலா மற்றும் வளவாளர் திரு ஆ. சத்தியமூர்த்தி ஆகியோர் பங்குபற்றினார்கள். இச் செயலமர்வில் புதிதாக நியமனம் பெற்ற 60 முகாமைத்துவ சேவைகள் அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7