சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலக ஏற்பாட்டில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (19.03.2026) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தற்போதைய காலத்தில் தொற்றா நோயினால் உடல், உள ஆரோக்கியம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால் உத்தியோகத்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வைத்தியர்களினால் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் தொற்றா நோய்களான இரத்த சீனி மட்டம், உடற்திணிவு சுட்டி, வயிற்றுப்பருமன், இரத்த அழுத்தம், கருப்பை தொடர்பான பரிசோதனை ஆகிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப நிகழ்வில் வைத்திய அதிகாரி திரு.ரி.கஜன் ,உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி தாதியர்களான திருமதி.சு.சுகன்யா, திருமதி ரி.விஜயபாரதி, திருமதி எஸ்.சர்மிளா ஆகியோரும் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






