யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.03.2026) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாணவர் இடைவிலகல், பாடசாலை மாணவர்களின் பிரச்சினைகள், சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் உள்ளிட்டவை கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், மாகாண சிறுவர் நன்னடத்தை உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5