இலங்கை இராணுவத்தின் 51வது காலால் படை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் 18.04.2026ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது . இந்த விழாவில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். தேசிய கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் பாரம்பரிய மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. இதன் போது பாரம்பரிய விளையாட்டுக்களான வழுக்கு மரம் ஏறுதல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வட மாகாண கடற்படைத் தளபதி அட்மிரல் புடிக்ஹ லியனகமகேஅவர்கள், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்கள், இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14