உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்ற கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அண்மைக்காலமாக வெள்ளிக்கிழமைகளில் ஆலயம் செல்வது குறைவடைந்து வருவதாகவும், இதனால் பிள்ளைகளின் அறநெறி சார்ந்த விடயங்கள் குறைவடைந்து காணப்படுவதால் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்விநிறுவனங்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி பிள்ளைகள் அறநெறி பாடசாலைகளுக்குச் செல்வதனை ஊக்கப்படுத்த அனைவரும் முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்தல், உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தற்போது மாவட்ட மட்டத்தில் காணப்படும் உளசமூக பிரச்சனைகளை அடையாளமான கண்டு அவற்றுக்கு இணைந்த வகையில் தலையீடுகளை மேற்கொள்வது பொருத்தமானதாக அமையும் என்பது தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி திரு. பரா.நந்தகுமார், உள மருத்தவ வைத்திய அதிகாரி திருமதி அ.வினோதா, மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் திரு ந.உதயகுமார் , அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக ஆலோசகர்கள், பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






