கிராமிய அபிவிருத்தித் திணைக்களத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம்(14.05.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த வாரம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றதாகவும், அக் கண்காட்சியானது 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றது எனவும், இனி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற முன்கூட்டி திட்டமிட்டு அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இது உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பாகவும் அவர்களை ஊக்குவிக்கவும் மக்களை சென்றடையஉதவும் எனவும் தெரிவித்தார். மேலும், இவ்வாண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் ரூபா 08.65 மில்லியனில் நடைமுறைப்படுத்திவருகின்ற 08 திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் செயற்பாடுகளும் ஆராயப்பட்டது.
மேலும் இக் கூட்டத்தில் மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிறிஜிற் நளாயினி உதயகுமார் அவர்கள் கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் கூட்டத்தில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, கிராம அபிவிருத்தி திணைக்களம் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுனேத்ரா சுதாகர் மற்றும் மாவட்ட பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






