யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் உள்ள சிறிய மாநாட்டு மண்டபமானது கூட்டங்கள் மற்றும் செயலமர்வுகள் நடாத்தும் வகையில் ஒலி அமைப்புக்கள் மற்றும் தளபாட வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் (14.05.2026) மு.ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கான நிர்வாகக் கடமைகள் மற்றும் மக்களுக்கான சேவைகளை மேன்மேலும் வினைத்திறனாகவும் விரைவாகவும் வழங்குதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, அரசாங்க அதிபரினால் உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.






