நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2026) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், குறித்த தீவக பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கடற்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன் இக்கலந்துரையாடல் ஆரம்பமானது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இ.சந்திரசேகர் அவர்களின் கருத்துரைகளைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைசார்ந்த விடயங்களும் தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, நீர் விநியோகம், சுகாதாரத் துறை, கால்நடை மற்றும் கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2026) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், குறித்த தீவக பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கடற்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன் இக்கலந்துரையாடல் ஆரம்பமானது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இ.சந்திரசேகர் அவர்களின் கருத்துரைகளைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைசார்ந்த விடயங்களும் தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, நீர் விநியோகம், சுகாதாரத் துறை, கால்நடை மற்றும் கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 13 14