மாவட்டச் செயலகம், தெல்லிப்பளை மற்றும் மருதங்கேணியில் கடமையாற்றும் சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உள சமூகம் தொடர்பான செயலமர்வு இன்றைய தினம்(23.06.2026) காலை 09.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்டச் செயலகத்திலும், கிராம மட்டத்திலும் சிறுவர் பெண்கள் அபிவிருத்தியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள சமூகம் சார்ந்த மேலதிக அறிவுகளைப் பெற்று மேலும் வினைத்திறனான செயற்பாட்டிற்காக பயன்வாய்ந்ததாக அமைகின்றது. மேலும், மருதங்கேணி மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் சமூகத்தில் நலிவடைந்தவர்களை உள சமூக ஆதரவூடாக வலிப்படுத்துவதற்கான வைகறை வேலைத் திட்டத்தினை மேற்கொண்டுவரும் FairMed நிறுவனம் இச் செயலமர்விற்கும் அனுசரணை வழங்கியுள்ளதற்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், கிராம மட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தியானது அவசியமானது அந்தவகையில் இச் செயலமர்வில் வளவாளர்களாக பங்குபற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உள மருத்தவ நிபுணர் எஸ்.சிவதாஸ் உள்ளிட்டவர்களால் தெரிவிக்கப்படும் கருத்துரைகள் மற்றும் நுட்பங்களை கருத்தில் எடுத்து மேலும் சிறப்பாக கடமையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இச் செயலமர்வில் வளவாளர்களாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உள மருத்தவ நிபுணர் எஸ். சிவதாஸ் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எஸ்.ஜீவசுதன் ஆகியோர் பங்குபற்றினார்கள். இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு Fair Med நிறுவன திட்ட உத்தியோகத்தர் திரு. றெனி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந.தயாபரன், மாவட்டச் செயலகம், தெல்லிப்பளை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பெண்கள் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






