நெடுந்தீவில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தினை 40 மில்லியன் ரூபாவில் கட்டுமானம் செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் (05.07.2026) மு. ப 11.30 மணிக்கு நெடுந்தீவில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதல்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என் பிரபாகரன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந் நிகழ்வில் 20 இலட்சம் ரூபா வீட்டுத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட காசோலைகள் கெளரவ அமைச்சர்களால் வழங்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான புத்தக பைகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






