வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA) தொடர்பான செயலமர்வு இன்றைய தினம் (08.07.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன், வட மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எந்திரி என். சுதாகரன், SEA ஆலோசனை, நிறுவன பொது முகாமையாளர் டாக்டர். நரேந்திர டி சில்வா, Oriental Consultants Global Co அணியின் தலைவி திருமதி. டொமோகோ ஹட்டோரி ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இச் செயலமர்வின் தொடக்கவுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், இச் செயலமர்வின் கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், நிலை பேண்தகு சக்தி அதிகார சபையினுடைய ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இச் செயலமர்வில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சக்திவளம் தொடர்பான கலந்துரையாடலாகவும் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வட மாகாணத்தின் மாவட்ட செயலாளர்கள் இது தொடர்பான விடய அறிந்துள்ளவர்களா இருப்பதனால், இது தொடர்பாக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதாகவும், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான விடையதானங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரதேச செயலாளர்கள், பிரதேச சபையினுடைய செயலாளர்கள் மற்றும் அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உதவியுடன் இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒவ்வொருவரும் தங்களுடைய பிரதேசம் மற்றும் கிராமத்தின் புதுப்பிக்கத்தக்க சக்தி வளம் தொடர்பான தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்க அதிபர் இதன்போது மேலும் தெரிவித்தார். திட்டத்தின் மூலோபாய
நோக்கமானது வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை ஆதரிப்பதற்காக SLSEA ஒரு மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டை (SEA) ஆரம்பித்துள்ளது. இது நாட்டின் எரிசக்தி மாற்றத்தில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதையும், மூலோபாய திட்டமிடலை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது ஆசிய அபிவிருத்தி வங்கி ADB-யின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை CEA 2025 செப்டம்பரில் வெளியிட்ட ToR-க்கு அமைய இது நடத்தப்படுகிறது.
SEA என்பது கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்சிகளில் சுற்றுச்சூழல் பரிசீலனைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய திட்டமிடல் கருவியாகும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக சவால்களை அடையாளம் காணவும், தீர்வுகளை ஆராயவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. இச் செயலமர்வில் பங்குதாரர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட்டன. இச் செயலமர்வில் வட மாகாண மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






