"முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக் கொள்வோம்" எனும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில்  "தேசிய பாதுகாப்பு தினம்" இன்று (2019.12.26) காலை 9.15 க்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமியால் 2004.12.26 ஆம் திகதி உயிரிழந்த மக்களிற்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. இப் பிரார்த்தனையில் மதகுருமார்கள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி),பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

1 Tsunami 3Tsunami