யாழ்.மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் M. பிரதீபன் அவர்களின் தலைமையில் கிராம உத்தியோகத்தர்களிற்கான அரச காணி, தனியார் காணி தொடர்பான நடைமுறைகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, வனவள திணைக்களம் , சுற்றுப்புறச்சூழல் தொடர்பான நடைமுறைகள் மற்றும் கனியவளத் திணைக்களம் பற்றியதான பயிற்சி நெறி இன்று (10.02.2020) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியின் வளவாளராக யாழ்.மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் C. பத்மநாதன் அவர்கள் கலந்துகொண்டார்.






